அமெரிக்க நேரப்படி நேற்று மாலை, வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
வெள்ளை மாளிகைக்கு வெளியே உள்ள செக் பாயிண்டில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
பதிலுக்கு பாதுகாப்பு அதிகாரிகளும் துப்பாக்கிச் சூடு நடத்த, அந்த நபர் காயமடைந்துள்ளார்.
அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட, சிகிச்சைக்குப் பலனில்லாமல் இறந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் 21 வயதான நசீர் பெஸ்ட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் எதற்காக இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தினார் என்பது தெரியவில்லை.
வெள்ளை மாளிகைக்கு அருகே, இவர் நடமாடக்கூடாது என்கிற நீதிமன்றங்களின் முந்தைய உத்தரவுகளை மீறி செக் பாயிண்டிற்கு வந்துள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
நியூயார்க் போஸ்ட் தகவலின் படி, வெள்ளை மாளிகைக்கு அருகே உள்ள பல என்ட்ரி பாயிண்டுகளில் முன்பு சுற்றிக்கொண்டிருந்திருக்கிறார்.
நசீர் பெஸ்ட் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
2025-ம் ஆண்டு ஜூன் மாதம், வெள்ளை மாளிகைக்கு அருகே வாகனப் போக்குவரத்தைத் தடுத்திருக்கிறார்.
அப்போது விசாரித்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. அவர் மனநல மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்த இரண்டு வாரங்களுக்குள், வெள்ளை மாளிகையின் தடைசெய்யப்பட்ட நடைபாதையில் நடந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்போது பெஸ்ட் தன்னை 'இயேசு கிறிஸ்துவின் நவீனகால அவதாரம்' என்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
மேலும் 'நான் கைது செய்யப்பட வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளார்.
அதன் பின், கிட்டத்தட்ட ஓராண்டிற்கு பின், நேற்று வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

0 comments:
Post a Comment