வக்கீல் வண்டு முருகனை சுற்றியிருக்கிறவர்களே அடிவாங்கி கொடுக்கிற காமெடிதான் இப்பவும் சேனல்களில் டாப்! அதே போன்றதொரு நிலைமையை உருவாக்கி விடும் போலிருக்கிறது கேட்காமலே விஜய்க்கு கிடைக்கும் சில அரசியல் சப்போர்ட்டுகள். இன்று தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டிருக்கும் அறிக்கை விஜய் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கும். ஆனால் விஜய்க்கு?
சரி. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதென்ன?
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அரசியல் வாதிகள் மேடைகளில் முதலமைச்சரைப் பற்றி வாயைத் திறந்தாலே போதும், உடனடியாக அவர்கள் மீது அவதூறு வழக்கு போடப்படுகிறது. பத்திரிகைகள் அந்தப் பேச்சினை வெளியிட்டால் அவர்கள் மீதும் அவதூறு வழக்கு.
ஒரு சில அரசியல் தலைவர்கள் ஒரு சில மாவட்டங்களில் உள்ளேயே நுழையக் கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது. நெருக்கடி நிலை காலத்திலே கூட இப்படிப்பட்ட நிலைமைகள் இல்லை. அந்த வரிசையிலே தான் “தலைவா” திரைப்படம் பல கோடி ரூபாய்ச் செலவிலே தயாரிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அந்தப் படத்தில் தம்பி விஜய் நடித்து, அது வெளிவருவதை அவருடைய ரசிக நண்பர்கள் பெரிதும் ஆவலாக எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
இந்த நிலையில் அந்தப் படத்திலே ஏதோ ஒரு வாக்கியம் அரசைத் தாக்குவதைப் போல இருப்பதாகக் கூறி, அந்தப் படம் வெளிவரும் திரையரங்குகளுக்கெல்லாம் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் நடிகர் விஜய், அந்தப் படம் அரசியல் படம் அல்ல என்றும், யாரோ சிலர் பரப்பி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
அவ்வளவிற்கும் அந்தப் படத்திலே நடித்துள்ள விஜயின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், இந்த ஆட்சிக்கு மிகவும் வேண்டியவர் என்று கருதப்படுகிறவர். அரசுக்கு ஆதரவாக பலமுறை நடந்து கொண்டவர்.
ஆனால் அவரும், நடிகர் விஜயும் முதலமைச்சரை இதற்காகச் சந்திப்பதற்காக கொடநாட்டிற்கே பயணம் மேற்கொண்டதாகவும், ஆனால் முதல்வரைப் பார்க்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் செய்தி வந்துள்ளது.
மேலும், தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு வழக்கமாக தமிழக அரசினால் அனுமதிக்கப்படும் “வரி விலக்கு” கூட, இந்தத் திரைப்படத்திற்கு மறுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
தமிழகத்தில் இப்படிப்பட்ட ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் புறம்பான நிலைமைகள் தொடருமேயானால், அதை யாரும் கண்டுகொள்ளாமல் நமக்கென்ன என்று இருந்து விடுவார்களானால், ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கத் தொடங்குகின்ற நிலைதான் ஏற்படும்.
ஜனநாயகம் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டு, தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் இருக்கிறது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இன்று இரவோ, அல்லது நாளையோ தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தும் அறிக்கை விட தயாராக இருக்கிறாராம். இருந்தாலும் பொறுமை காக்கும்படி அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்.
சரி. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதென்ன?
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அரசியல் வாதிகள் மேடைகளில் முதலமைச்சரைப் பற்றி வாயைத் திறந்தாலே போதும், உடனடியாக அவர்கள் மீது அவதூறு வழக்கு போடப்படுகிறது. பத்திரிகைகள் அந்தப் பேச்சினை வெளியிட்டால் அவர்கள் மீதும் அவதூறு வழக்கு.
ஒரு சில அரசியல் தலைவர்கள் ஒரு சில மாவட்டங்களில் உள்ளேயே நுழையக் கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது. நெருக்கடி நிலை காலத்திலே கூட இப்படிப்பட்ட நிலைமைகள் இல்லை. அந்த வரிசையிலே தான் “தலைவா” திரைப்படம் பல கோடி ரூபாய்ச் செலவிலே தயாரிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அந்தப் படத்தில் தம்பி விஜய் நடித்து, அது வெளிவருவதை அவருடைய ரசிக நண்பர்கள் பெரிதும் ஆவலாக எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
இந்த நிலையில் அந்தப் படத்திலே ஏதோ ஒரு வாக்கியம் அரசைத் தாக்குவதைப் போல இருப்பதாகக் கூறி, அந்தப் படம் வெளிவரும் திரையரங்குகளுக்கெல்லாம் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் நடிகர் விஜய், அந்தப் படம் அரசியல் படம் அல்ல என்றும், யாரோ சிலர் பரப்பி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
அவ்வளவிற்கும் அந்தப் படத்திலே நடித்துள்ள விஜயின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், இந்த ஆட்சிக்கு மிகவும் வேண்டியவர் என்று கருதப்படுகிறவர். அரசுக்கு ஆதரவாக பலமுறை நடந்து கொண்டவர்.
ஆனால் அவரும், நடிகர் விஜயும் முதலமைச்சரை இதற்காகச் சந்திப்பதற்காக கொடநாட்டிற்கே பயணம் மேற்கொண்டதாகவும், ஆனால் முதல்வரைப் பார்க்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் செய்தி வந்துள்ளது.
மேலும், தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு வழக்கமாக தமிழக அரசினால் அனுமதிக்கப்படும் “வரி விலக்கு” கூட, இந்தத் திரைப்படத்திற்கு மறுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
தமிழகத்தில் இப்படிப்பட்ட ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் புறம்பான நிலைமைகள் தொடருமேயானால், அதை யாரும் கண்டுகொள்ளாமல் நமக்கென்ன என்று இருந்து விடுவார்களானால், ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கத் தொடங்குகின்ற நிலைதான் ஏற்படும்.
ஜனநாயகம் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டு, தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் இருக்கிறது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இன்று இரவோ, அல்லது நாளையோ தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தும் அறிக்கை விட தயாராக இருக்கிறாராம். இருந்தாலும் பொறுமை காக்கும்படி அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்.


0 comments:
Post a Comment