சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்த ஹாரி பாக்ஸர் என்பவன் பணம் கேட்டு மிரட்டல் விடுத்திருந்தான். ரன்வீர் சிங்கின் செயலாளருக்கு வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் மூலம் இந்த மிரட்டல் வந்திருந்தது. இது தவிர பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி வீட்டின் மீதும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இத்துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். ரன்வீர் சிங்கிற்கு வந்த மிரட்டல் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். போலீஸார் ரன்வீர் சிங்கிற்கு வந்த மிரட்டல் வாய்ஸ் மெசேஜ் உண்மையிலேயே ஹாரி பாக்ஸருக்குரியதா அல்லது வேறு யாருடைய வாய்ஸா என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஹாரி பாக்ஸர் வாய்ஸ் மும்பை மட்டுமல்லாமல் இந்தியாவில் எந்த விசாரணை ஏஜென்சியிடமும் இல்லை. ஹாரி பாக்ஸர் அமெரிக்காவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரன்வீர் சிங்கிற்கு வந்த மிரட்டல் வாய்ஸ் மெசேஜை அமெரிக்க விசாரணை ஏஜென்சிக்கு அனுப்பி அதனை ஹாரி பாக்ஸர் வாய்ஸோடு ஒத்துப்பார்க்கும்படி மும்பை போலீஸார் கேட்டுக்கொண்டனர். அமெரிக்க விசாரணை அதிகாரிகள் வந்த சத்தத்தை தங்களிடம் இருக்கும் ஹாரி பாக்ஸர் சத்தத்தோடு ஒப்பிட்டு பார்த்ததில் அது ஹாரி பாக்ஸர் சத்தம்தான் என்பது உறுதி செய்யப்பட்டதாக மும்பை குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
அதோடு மேலும் சில இடங்களுக்கு ஹாரி பாக்ஸர் அனுப்பிய வாய்ஸ் மேசேஜை அனுப்பி அவர்களிடம் இருக்கும் சத்தத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் மிரட்டல் எங்கிருந்தது வந்தது என்பதையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்க நம்பரில் இருந்து ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் மெசெஜ் அனுப்பப்பட்டதாக குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரன்வீர் சிங்கிற்கு மும்பை போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். ரன்வீர் சிங் மேலாளரிடம் போலீஸார் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தில் ஹாரி பாக்ஸர் முக்கிய பிரமுகராக இருந்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment