Latest News
Monday, February 9, 2026

Narges Mohammadi: அமைதிக்கான நோபல் வென்றவருக்கு 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - காரணம் என்ன?

2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் ஈரானைச் சேர்ந்த நர்கீஸ் முகமதி.

'குற்றம் செய்ய ஒன்று கூடுதல் மற்றும் கூட்டுச் சதி செய்தல்' என்கிற அடிப்படையில், நேற்று ஈரானிய நீதிமன்றம் முகமதிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

மேலும், அவரது பரப்புரை செயல்பாடுகளுக்காக கூடுதலாக 1.5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, இவர் 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

கூடுதலாக, இரண்டு ஆண்டுகள் கோஸ்ஃப் என்கிற ஈரானிய நகரத்திற்கு உள்நாட்டுக் கடத்தல் செய்யப்படுவார்... இரண்டு ஆண்டுகள் இவர் வெளிநாட்டிற்கு செல்லக்கூடாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நர்கீஸ் முகமதி | Narges Mohammadi
நர்கீஸ் முகமதி | Narges Mohammadi

ஈரானிய பெண்களின் உரிமைக்காகப் போராடியதற்காக, 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம், முகமதி கைது செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து கொண்டும் தொடர்ந்து அரசிற்கு எதிராகப் போராடியதற்காக, 2024-ம் ஆண்டு ஜூன் மாதம், கூடுதல் ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால், முகமதியின் உடல்நிலை காரணமாகவும், சிகிச்சை காரணமாகவும் அந்த ஆண்டின் டிசம்பர் மாதம் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.

கடந்த டிசம்பர் மாதம், மீண்டும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இப்போது முகமதிக்கு கூடுதலாக 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Narges Mohammadi: அமைதிக்கான நோபல் வென்றவருக்கு 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - காரணம் என்ன? Rating: 5 Reviewed By: gg