Latest News
Monday, March 16, 2026

புதுச்சேரி: `வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் ஹோட்டல்களுக்கு சீல்!’- மாவட்ட ஆட்சியர் அதிரடி

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக ஹார்முஸ் நீரிணியை மூடியது ஈரான். உலகின் 20% எண்ணெய் வர்த்தகம் இந்த நீரிணை வழியாகத்தான் நடைபெறுகிறது என்பதால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டிருக்கிறது.

இந்நிலையில் எரிவாயு தட்டுப்பாட்டை தவிர்க்க அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-ன் கீழ், இயற்கை எரிவாயு விநியோக ஒழுங்குமுறை ஆணையை அமல்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.  ஆனாலும் தற்போது வரை சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், தற்போது வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன்

இந்த நிலையில் புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன், கேஸ் சிலிண்டர் விநியோகஸ்தகர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது வீட்டு உபயோக சிலிண்டரை ஹோட்டல்களில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.

அத்துடன் அப்படி பயன்படுத்துகிறதா என்பதை காவல்துறையினரும், குடிமைப் பொருள் வழங்கல் துறையினரும் இணைந்து உடனடியாக சோதனைகள் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தபட்டது. மேலும் விதிமுறைகளை மீறி வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பயன்படுத்தும் ஹோட்டல்களை, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடி சீல் வைக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தார் ஆட்சியர் குலோத்துங்கன்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: புதுச்சேரி: `வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் ஹோட்டல்களுக்கு சீல்!’- மாவட்ட ஆட்சியர் அதிரடி Rating: 5 Reviewed By: gg