சீன பயணத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் 'ஈரான்' மீது ஃபோக்கஸ் செய்ய தொடங்கியுள்ளார்.
ட்ரம்பின் சீன பயணம் ஈரான் போரில் முக்கிய திருப்புமுனையைக் கொண்டு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஈரான் போர் நிறுத்தத்திற்கு ஈரானும், அமெரிக்காவும் 'நான்... நான்' என பரஸ்பரமாக ஐந்து நிபந்தனைகளை விதித்துள்ளது என்று மத்திய கிழக்கு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் 5 நிபந்தனைகள்:
1. ஈரான், லெபனான் மீதான அனைத்து தாக்குதல்களையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும்.
2. ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும்.
3. முடக்கப்பட்டுள்ள ஈரான் நிதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
4. போர் சம்பந்தமான பாதிப்புகளுக்கு நஷ்ட ஈடு வேண்டும்.
5. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு உள்ள இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும்.
அமெரிக்காவின் 5 நிபந்தனைகள்:
1. முன்னால் விதிக்கப்பட்ட தடை மற்றும் கொள்கை முடிவுகளால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது.
2. ஈரானிடம் இருக்கும் கிட்டத்தட்ட 400 கிலோ கிராம் யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்.
3. ஈரானின் ஒரே ஒரு அணு ஆயுத நிலையம் மட்டுமே இயங்க வேண்டும்.
4. முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளில் 25 சதவிகிதத்தைக் கூட விடுவிக்க முடியாது.
5. பேச்சுவார்த்தை முடிந்தால் தான் ஈரான், லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்த முடியும்.
இந்த போட்டி நிபந்தனைகளால் போர் நிறுத்தம் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது!

0 comments:
Post a Comment