Latest News
Sunday, June 21, 2026

ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்: மீண்டும் மூடப்பட்ட ஹார்மூஸ் வழித்தடம்! - என்ன காரணம்!

மத்திய கிழக்கு நாடான லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. லெபனான் மீதான தாக்குதல் தொடர்வதால், அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறிவிட்டதாக ஈரான் அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதன் எதிரொலியாக, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியப் பாதையாகத் திகழும் 'ஹார்முஸ் நீரிணையை' மீண்டும் மூடுவதாக ஈரான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஈரான் புரட்சிகர காவல் படையின் ரோந்துபடகு
ஈரான் புரட்சிகர காவல் படையின் ரோந்துபடகு

அமெரிக்காவும் ஈரானும் மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அண்மையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னரும், ஹார்முஸ் நீரிணையானது 'மூடுவதும் திறப்பதுமாக' ஒரு நிலையற்ற தன்மையிலேயே நீடித்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் ஒருவித அசாதாரண மற்றும் பதற்றமான சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்: மீண்டும் மூடப்பட்ட ஹார்மூஸ் வழித்தடம்! - என்ன காரணம்! Rating: 5 Reviewed By: gg