தமிழகம் முழுவதும் சுவாதியின் கொலை வழக்கு மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. அந்த கொடூர கொலைகாரன் யார்? அவனை போலீசார் எப்போது கைது செய்வார்கள்? என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் ஆவலோடு உள்ளது.
இந்தநிலையில் நேற்று சுவாதியை கொன்ற கொலையாளி கைது செய்யப்பட்டு விட்டதாக நிறைய வதந்திகள் பரவியது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டுவிட்டதாகவும், தொலைக்காட்சி செய்தி வாயிலாக வதந்தி கிளம்பியது.
நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனிடம் சுவாதியின் கொலைவழக்கு குறித்த விவரங்கள் பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:–
இந்த வழக்கு மிகவும் முக்கியமான வழக்காகும். எனவே இந்த வழக்கின் விசாரணை விவரங்களை நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. இதுவரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. தயவுசெய்து வதந்திகளை யாரும் பரப்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கொலையாளியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளோம் அந்த புகைப்படத்தை பார்த்து கொலையாளி பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர், விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். கொலையாளியை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம். கண்டிப்பாக பிடித்தே தீருவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment