Latest News
Tuesday, May 26, 2026

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; போர் நிறுத்தத்தின்போது இந்தத் தாக்குதல் ஏன்?

'ஈரானுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை நெருங்கிவிட்டோம்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூற, இதற்கு ஈரானும் பாசிட்டிவ் சிக்னல் தந்தது.

இந்த நிலையில்தான், அமெரிக்கா நேற்று தெற்கு ஈரானில் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற படகுகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் மீது நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர், கடற்படை கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் கூறுவதாவது...

டிம் ஹாக்கின்ஸ்
டிம் ஹாக்கின்ஸ்

''ஈரானியப் படைகளால் அமெரிக்க வீரர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அமெரிக்கப் படைகள் இன்று தெற்கு ஈரானில் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தின.

ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற ஈரானியப் படகுகள் ஆகியவை இந்தத் தாக்குதலின் இலக்குகளாக இருந்தன.

தற்போது அமலில் இருக்கும் போர்நிறுத்தத்தின் போது, அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், நமது படைகளைப் பாதுகாக்கும் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது"

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; போர் நிறுத்தத்தின்போது இந்தத் தாக்குதல் ஏன்? Rating: 5 Reviewed By: gg