எம்ஜிஆர்தான் எனக்கு தலைவர் என்று டைரக்டர் அமீர் கூறினார். சமீபத்தில் நடந்த ஆடியோ விழா ஒன்றில் பங்கேற்ற அமீர் பேசுகையில், இது இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை. ஒரு மாநாடு மாதிரி இருக்கிறது. ஒரு பாடல் வெளியீட்டு விழா, மாநாடு மாதிரி நடப்பதை பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. தொழிலாளர்களே இந்த படத்தின் பாடல்களை வெளியிடப் போகிறார்கள் என்று தகவல் அறிந்ததும் நானும், ஜனநாதனும் விழாவில் கலந்து கொண்டோம். தொழிலாளர்களை நேசிக்க வேண்டும் என்ற சிந்தனை, மக்களை நேசிப்பவர்களுக்கு மட்டுமே வரும். எனக்கு தலைவர் என்றால் அது எம்.ஜி.ஆர்.தான். அவர், தலைவன் என்ற படத்தில் நடித்தார். இப்போது விஜய், தலைவா என்று ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது தலைவனாக இப்போது பாஸ் வந்திருக்கிறார். அவர் எதை நினைத்து சினிமாவுக்கு வந்திருக்கிறாரோ, அது நிறைவேற வாழ்த்துகிறேன், என்றார்.
Wednesday, June 5, 2013
Share Article
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment